மனித வாழ்க்கை என்பது மிகப்பெரிய அரிய வாய்ப்பு. மனித பிறப்பே ஆனந்தத்தின் அடையாளம்.ஜனனம் முதல் மரணம் வரை ஆனந்தத்தை அனுபவிக்க பிறந்தவர்கள் நாம். ஒவ்வொருவரின் அகமும் ஆனந்தத்தையே அடிப்படையாகக் கொண்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இதை உணராமல், அறியாமையால் மகிழ்ச்சியை இழந்து மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். சிலரின் ஆனந்தம் பட்டங்கள் பெறுவதிலும் பணம் சம்பாதிப்பதிலும், நல்லுறவுகளை பேணுவதிலும், புகழிலும் பாதுகாப்பான வாழிடம் அமைப்பதிலும், ஆடம்பர் வாழ்வை பெறுவதிலும் என ஒவ்வொரு வருக்கும் இது மாறுபடுகிறது. உண்மையில் இவை ஆனந்தத்தை தருபவை தானா? சுவாமி ஸ்வருபானந்தா அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் சுவாமி அவர்கள் ஒருமுறை சிங்கப்பூரில் ஒரு மாநாட்டில் உரை நிகழ்த்துவதற்காக சென்று கொண்டிருந்த போது ஒரு கல்லூரி மாணவனிடம் உரையாட நேர்ந்தது. சுவாமி: எங்கு சென்று கொண்டிருக்கிறாய்? மாணவன்:கல்லூரிக்கு சுவாமி:எதற்காக? மாணவன்: நல்லறிவை பெறுவதற்காக சுவாமி: ஓ மிக்க மகிழ்ச்சி அனைத்து வகுப்புகளிலும் தவறாமல் கலந்து கொள்வாயா? மாணவன்: உங்களிடம் என்னால் பொய் கூற இயலவில்லை நிறைய வகுப்புகளை புறக்கணித்து விடுவேன். சுவாமி : நல்லறிவை பெற வகுப்புக்கு செல்கிறாய். பின் ஏதற்காக வகுப்புகளை புறக்கணிக்கிறாய்? மாணவன்: நல்லறிவை பெறுவதற்காக, மாணவன்: நான் எனது கல்லூரியின் இறுதி மாதத்தில் உள்ளேன். பரீட்சை எழுதுவதற்கு போதுமான வகுப்புகளை கடந்து விட்டேன். இதைக்கொண்டே நான் நல்ல மதிப்பெண் மற்றும் பட்டம் பெற்று விடுவேன். வகுப்புக்கு போவதால் எந்த பயனும் இல்லை. சுவாமி: அப்படியென்றால் நீ கல்லூரிக்கு செல்வது நல்லறிவை பெறுவதற்காக அல்ல. பட்டம்பெறுவதற்கே. சரி நான் உனக்கு பட்டம் தருகிறேன். அப்படியென்றாலும் கல்லூரிக்கு செல்வாயா? மாணவன்: உங்களால் பட்டம் கொடுக்க முடியுமா? சுவாமி:ஆமாம் என்னால் முடியும், மாணவன்: ஆனால் இது இந்தியா இல்லை. நீங்கள் கொடுக்கும் பட்டத்தைக் கொண்டு எனக்கு‌ வேலை கிடைக்குமா? சுவாமி: உனக்கு பட்டம் வேண்டுமா? அல்லது வேலை வேண்டுமா? மாணவன்: கட்டாயமாக வேலை தான். வேலை கிடைக்க உதவாத பட்டத்தைக் கொண்டு என்ன செய்வது? சுவாமி: சரி இப்போதே எங்கள் ஆசிரமத்திற்கு வந்து விடு, எங்களின் சேவை காரியத்தில் நீயும் பணியாற்றலாம். நிறைய மக்கள் நமது உதவிக்காக காத்துக் கொண்டுள்ளனர். நிறைய காரியங்கள் உள்ளன. உன் வாழ்நாளுக்கும் செய்து கொண்டே இருக்கலாம். மாணவன்: ஆசிரமத்தில் பணி செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? சுவாமி: இது சமுதாய சேவை பணத்திற்கே இடமில்லை. மாணவன்: பணமில்லாமல் வேலையா? சுவாமி: உண்மையில் சொல் உனக்கு என்னதான் வேண்டும்? பணமா? வேலையா? மாணவன் :பணத்திற்க்காகக்தான் வேலை வேண்டும். சுவாமி : சரி நான் உனது பெயரில் 10 மில்லியன் டாலர் பணம் தருகிறேன். மாணவன்: (ஆச்சரியத்தில்) உண்மையாகவா! சுவாமி: ஆம். நாளை உனது வங்கி கணக்கில் 10 மில்லியன் டாலர் பணம் இருக்கும். ‘ மாணவன்: அவை அனைத்தும் என் பணமா? அதைக் கொண்டு என்னால் கார், வீடு, கைபேசி என அனைத்தும் வாங்கலாமா? சுவாமி : பொறு! பொறு! நீ பணம்‌ தான்‌ கேட்டாய்‌. பின்‌ எதற்கு கார்‌, வீடு, என்றல்லாம்‌ கூறுகிறாய்‌. உன்‌ வங்கி கணக்கில்‌ பணம்‌ இருக்கும்‌ ஆனால்‌ அதைக்‌ கொண்டு நீ பொருட்களை வாங்க இயலாது. மாணவன்‌ : பொருட்களை வாங்க இயலாத பணம்‌ எனக்கு எதற்கு? சுவாமி : ஓ…உனக்கு பணம்‌ தேவையில்லை நீ விரும்பும்‌ வீடு, கார்‌ கைபேசி இது தான்‌ வேண்டுமா?‌ சரி அவற்றை எல்லாம்‌ தருகிறேன்‌ மாணவன்‌ : நான்‌ எனது வீட்டில்‌ சந்தோஷமாக வசிக்கலாமா, காரை ஓட்டி மகிழலாமா, கைபேசியை விரும்பியவாறு பயன்படுத்திக்‌ கொள்ளலாமா? சுவாமி: ம்ம்ம்‌. . வீடு, கார்‌. கைபேசி உன்னுடையது. அதில்‌ வசிக்க இயலாது. கார்‌ ஓட்ட இயலாது. மாணவன்‌ : (விரக்தியின்‌ உச்சியில்‌) எனக்கு சந்தோசத்தைக்‌ கொடுக்காத இவற்றால்‌ எனக்கு என்ன பிரயோசனம்‌? சுவாமி : நீ ஏன்‌ சந்தோசமாக இருக்க வேண்டும்‌? மாணவன்‌ : இது என்ன கேள்வி. நான்‌ சந்தோஷமாக இருக்க வேண்டும்‌. அதனால்‌ நான்‌ சந்தோசமாக இருக்க வேண்டும்‌. ‘இவ்வாறுதான்‌ ஒவ்வாரு மனிதனும்‌ ஞானத்திற்காக, பட்டத்திற்காக, வேலைக்காக, பணத்திற்காக என ஓடிக்கொண்டே உள்ளான்‌. ஆனால்‌ இவை அனைத்திற்க்கும்‌ அடிப்படையாக இருப்பது சந்தோஷம்‌‌ என்ற உயர்‌ இலட்சியமே. அவ்வாறு இருக்க நம்மை நாமே ஏன்‌ துன்பப்‌ படுத்திக்கொள்ள வேண்டும்‌? ஒவ்வொரு பணியையும்‌ சந்தோசமாக செய்வோம்‌. நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம்‌, நான்‌ சந்தோஷத்தின்‌, ஆனந்தத்தின்‌ ஆதாரம்‌ என்று. எதற்காக சந்தோஷத்தை தள்ளி போட வேண்டும்‌? ஒவ்வாரு நொடியையும்‌ அனுபவிப்போம்‌. துன்பம்‌ நம்முள்‌ வர விடாமல்‌ பாதுகாத்துக்கொள்வோம்‌. தைத்திரிய உபநிடதம்‌ மனிதன்‌ என்பவன்‌ மகிழ்ச்சியிலுருந்து உருவானவன்‌ என்பதை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.
மகிழ்ச்சியிலிருந்து உடலும்‌. உடலிலிருந்து மகிழ்ச்சியும்‌ உருவாகி வளம்‌பெறுவதே வாழ்க்கை. தாய்‌ தந்தையின்‌ மகிழ்ச்சியில்‌ உடல்‌ பெற்று. பஞ்சபூதங்களிலிருந்து உயிர்‌ பெற்று எண்ணம்‌ எனும்‌ மனதால்‌ உடலின்‌ புலனுறுப்புகளுடன்‌ இணைந்து ஞானம்‌ பெற்று மகிழ்ச்சியினை அனுபவிக்கும்‌ ஜீவன்‌ மனிதன்‌. எனவே ஆனந்தத்திற்கு ஆதாரமாக இருப்பவை ஞானம்‌, மனம்‌, உயிர்‌ மற்றும்‌ உடல்‌. ‘இவை ஒவ்வொன்றும்‌ மற்றொன்றை சார்ந்தவை. உடல்‌ மற்றும்‌ ப்ராணனை பார்க்க முடிவதால்‌ ஸ்தூல உடல்‌ என்றும்‌ ஞானம்‌ மற்றும்‌ மனம்‌ இவற்றை கான முடியாததால்‌ சூட்சும உடல்‌ என்றும்‌ கூறுகின்றனர்‌. ஸ்தூல உடல்‌ ஆரோக்கியமாக இருக்கவேண்டும்‌ என்றால்‌ அதனை இயக்கும்‌‌ சூட்சும உடல்நலமாக இருக்க வேண்டும்‌. அதாவது ஞானமும்‌ அதைனைப்பெறுவதற்க்கு மனமும்‌ நன்றாக இருக்க வேண்டும்‌. இவ்விரு உடலையும்‌ இணைக்கும்‌ பாலமாக விளங்குவது மனம்‌. எனவேதான்‌ மனமே மகிழ்ச்சிக்கும்‌ துன்பத்திற்க்கும்‌, நோய்க்கும்‌, ஆரோக்கியத்திற்க்கும்‌ அடிப்படையாக உள்ளது. உடல்‌- பஞ்ச புதங்களின்‌ தொகுப்பு அண்டத்தில்‌ உள்ளதே பிண்டத்தில்‌ உள்ளது என்று நம்‌ முன்னோர்கள்‌ ஞானத்தில்‌ உணர்ந்ததை இன்று நவீன அறிவியல்‌ பல அதி நவீன உபகரணங்களைக்‌ கொண்டு உறுதிப்படுத்துகிறது. அதாவது நமது உடல்‌ ஜீரண மண்டலம்‌, நரம்பு மண்டலம்‌, சுவாச மண்டலம்‌. கழிவு நீக்க மண்டலம்‌ என பத்து வித மண்டலங்களாகப்‌ பிரிக்கப்படுகிறது. ஒவ்வாரு மண்டலமும்‌ பல உறுப்புகளைக்‌ கொண்டுள்ளது. அவை தான்‌ செய்யும்‌ பணிக்கேற்ப பல திசுக்களால்‌ ஆனது ஒவ்வொரு தீசுவும்‌ செல்களால்‌ ஆனது.
செல்கள்‌ – திசுக்கள்‌ – உறுப்புகள்‌ – மண்டலங்கள்‌ – உடல்‌
ஒவ்வாரு செல்லும்‌ இந்த அடிப்படை பஞ்சபூத பாகங்களைக்‌ கொண்டிருக்கும்‌. அதன்தன்‌ பணிக்கேற்ப அதன்‌ விகிதாசாரம்‌ மாறுபடும்‌. ஆனால்‌ அதன்‌ சீர்தன்மை மாறுபடாமல்‌ இருத்தல்‌ அவசியம்‌. பஞ்சபூத சக்திகளின்‌ மேலோங்கிய தன்மைக்கேற்ப உடல்‌ உறுப்புகளையும்‌ நம்‌ முன்னோர்கள்‌ வகைப்படுத்தியுள்ளனர்‌. அண்டம்‌                                            பிண்டம்‌ பூமி – உட்கரு (நியுக்ளியஸ்‌) – மண்ணீரல்‌, இரைப்யை தண்ணீர்‌ – சைட்டோபிளாசம்‌. – சிறுநீரகம்‌,சிறுநீரகப்பை வாயு – ப்ராண வாயு ‌ – நுரையீரல்‌, பெருங்குடல்‌ சூரியன்‌/நெருப்பு ‌‌ – மைட்டோகாண்ட்ரியா – இதயம்‌, சிறுகுடல்‌(ஐடராக்னி) வெற்றிடம்‌ (ஆகாயம்‌) – லைசோசோம் – கல்‌லீரல்‌, பித்தப்பை பஞ்சபூதங்களினால்‌ வளம்பெறும்‌ நம்‌ உடலானது தாயின்‌ கருமுட்டையும்‌ தந்தையின்‌ விந்தணுவும்‌ இணைந்து கருவாகி ஒன்பது மாதங்களில்‌ உருவமாகிறது. எவ்வித புற வழிகாட்டுதலுமின்றி தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறது. ஒவ்வாரு உருப்பும்‌ அதன்தன்‌ தேவைக்கேற்ப‌ பணியின்‌ தன்மையை பொருத்து மிக அழகாக நேர்த்தியாக உருவாக்கிக் கொள்கிறது. இத்தகைய அற்புத ஞானம்‌ படைத்த நமது உடலிற்கு தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும்‌ சக்தியும்‌ உண்டு. ஒவ்வாத உணவு உட்சென்றால்‌ அதனை வாந்தியாகவோ. பேதியாகவோ, வெளித்தள்ளி உடலைக்காக்கும்‌ தன்மையுண்டு. ஆனால்‌ இத்தகைய சீர்செய்யும்‌ செயல்பாட்டிற்கு உயிர்‌ என்னும்‌ ஆற்றல்‌ தேவைப்படுகிறது. உயிர்‌ நமது உடல்‌ உயிரினாலேயே இயக்கப்படுகிறது.உயிர்‌ பிரிந்தவுடன்‌ உடல்‌ சலனமற்ற ஐடமாகின்றது. கண்ணுக்கு புலப்படும்‌ உடலுக்கு கண்ணுக்கு புலப்படாத உயிரே ஆதாரம்‌. ஒரு உறுப்புக்கு செல்ல வேண்டிய உயிர்‌ போதுமான அளவு கிடைக்கவில்லை யென்றால்‌ சக்தி இழந்து அந்த உறுப்பு நோய்வாய்ப்பட துவங்குகிறது. அதேபோல்‌ ஒரு உறுப்பில்‌ கழிவு தேங்கியிருப்பின்‌ அதனை வெளியேற்றி அவ்வுருப்பின்‌ செயல்திறனை பாதுகாப்பதும்‌ உயிராற்றலே. எனவே உடலில்‌ ஏற்படும்‌ அனைத்து நோய்களுக்கும்‌ உயிராற்றல்‌ பற்றாக்‌ குறைய அனைத்து உறுப்புகளின்‌ செயல்பாட்டுக்கும்‌ ஆதாரமான உயிர்‌ எங்கிருந்து கிடைக்கின்றது?பஞ்சபூதங்களினால்‌ உருவான உடலிற்கு பஞ்சபூதங்களிலிருந்து உயிராற்றல்‌ பெ            றப்படுகிறது.   வெற்றிடம்‌ – ஆகாய சக்தி       ஆகாய சக்தியே ஒருவரின்‌ உயிரின்‌ இரகசியம்‌. வெற்றிடம்‌ இருக்கும்போதுதான்‌ உயிர்காற்று‌ உள்நுழைகிறது. எந்த அளவு ஆகாய சக்தி அல்லது வெற்றிடம்‌ இருக்கிறதோ அந்த அளவு ப்ராணன நிரப்பிக்‌ கொள்ள இயலும்‌. ஒருவரின்‌ ஆரோக்கியமும்‌ மேலோங்கும்‌. அன்பு, சந்தோசம்‌, மனமகிழ்ச்சி, திருப்தி, நினைவு அமைதி, கருணை, பாராட்டும்‌ மனப்பாங்கு அனைவரையும்‌ இறைவனின்‌ அம்சமாக உயர்வு தாழ்வின்றி அணுகும்‌ பக்குவம்‌, பொறுமை, பண்பு, பிரிவு போன்ற மனநிலையினாலும்‌ ஏகாந்தமாக இயற்கையோடு ஒத்திசையும்‌ போதும்‌, சரியான உபவாச முறைகள்‌ மூலமாகவும்‌, விளையாட்டு, தியானம்‌ மற்றும்‌ யோகத்தின்‌ மூலமாகவும்‌ ஆகாய சக்தியை உருவாக்கவும்‌ அதிகரிக்கவும்‌ செய்யலாம்‌. மனதளவிலும்‌, உடலளவிலும்‌ ஆகாய சக்தி குறைந்து ஒருவரின்‌ கனம்‌ கூடும்‌பொழுது அவர்‌ மரணத்தை நெருங்குகிறார்‌. இறுதியாக முழுமையாக வெற்றிடம்‌ குறைந்துவிடும்‌ பொழுது ப்ராணன்‌ உள்செய்ய இயலாமல்‌ மரணம்‌ ஏற்படுகிறது. எனவேதான்‌ இறந்த உடலிற்கு உயிர்கொண்ட உடலைவிட கணம்‌ கூடுகிறது. காற்று – ப்ராண சக்தியை பெருக்குதல்‌ ‘     இலைகளின்‌ வழியே வரும்‌ காற்றில்‌ 21% சதவிகிதத்திற்கும்‌ அதிகமான ப்ராண சக்தி இருக்கும்‌ போது‌ அந்த காற்று உயிராற்றல்‌ மிகுந்த காற்றாகிறது. (ஏனென்றால்‌ நமது உடலின்‌ இரத்தத்தின்‌ காற்றளவு 21%. இதைவிட சுற்றுப்புறத்தில்‌ ப்ராணவாயு குறையுமாயின்‌ உடலில்‌ உள்ள காற்று சுற்றுப்புறத்திற்கு பரவுதல்‌ (Dispersion) என்ற தத்துவத்தில்‌ வெளியேறிவிடும்‌. ப்ராண சக்தியின்றி உடல்‌ உறுப்புகள்‌ ஸ்தம்பித்து.இறப்பு ஏற்பட்டுவிடும்‌. எனவே ப்ராண சக்தி மிகுந்த காற்றை நாம்‌ சுவாசிக்கும்போது நமது அனைத்து செல்களும்‌ புத்துணர்வு பெறுகிறது.தாவரங்களின்‌ ஒளிச்சேர்க்கையிலிருந்து வெளிவரும்‌ பிராணன்‌ மிகுந்த காற்று நமக்கு: உயிர்காற்றாகிறது. நமது உடலிலிருந்து வெளிவரும்‌ அபானன்‌ ( Co2-கார்பன்‌-டை -ஆக்சைடூ) மிகுந்த காற்று தாவரங்களுக்கு உணவாகிறது.
துளசி, திருநீற்றுப்பச்சிலை, கற்பூரவள்ளி,    வெற்றிலை, மருதாணி, நருமணமுள்ள மலர்கள்‌ போன்றவை அதீத ப்ராண சக்தி மிகுந்த தாவரங்கள்‌. எனவே இவற்றின்‌ அருகில்‌ இருக்கும்பொழுது நமது ப்ராண சக்தி பற்றாக்குறை நீங்கப்பெற்று ஆரோக்கியம்‌ மேம்படும்‌. நீர்‌- ப்ராணனை ஊருக்கதல்‌ மழைநீர்‌. அருவிநீர்‌, கிணறு மற்றும்‌ குளம்‌ ஆறு போன்ற இயற்கை நீரேற்றங்களில்‌ உள்ள நீரில்‌(மாசுபடாதிருத்தல்‌ வேண்டும்‌) அதீத உயிராற்றல்‌ உள்ளது. நீரானது மற்ற பஞ்சபூத சக்திகளுடன்‌ இணைந்திருக்கும்பொழுது அதன்‌ உயிராற்றல்‌ மேம்பட்டு உடலுக்கு உயிர்‌ சேர்க்கிறது. மழைநீரில்‌, விளையாடுதல்‌, மழைநீரை அருந்துதல்‌, கிணறு, குளம்‌ மற்றும்‌ ஏரிகளில்‌ விளையாடுவதன்‌ மூலம்‌‌ .உடலில்‌ வறட்சி நீங்கி நீரின்‌ ப்ராண சக்தி மேம்படுகிறது.
                .
நெருப்பு – உயிராற்றலை கூட்டுதல்‌ ‌     சூர்ய சக்தியில்‌ அதிக அளவு உயிராற்றல்‌ பெறப்படுகிறது. (வெயிலில்‌ இட்டு தானியங்களை விதைக்க செய்வார்கள்‌. எவ்வித குறைபாடுமின்றி அனைத்தும்‌ நன்கு முளைக்கும்‌. ஆனால்‌ அதே தானியத்தை வானலியில்‌ இட்டு வறுத்து முளைக்கப்‌ போட்டால்‌ ஒன்று கூட முளைக்காது. இதிலிருந்து சூர்ய வெப்பத்தின்‌ உயிராற்றல்‌ திறனை அறியலாம்‌. உயிராற்றல்‌ மிகுந்த வெப்பத்தினால்‌ உடலில்‌ பல வேதியல்‌ மாற்றங்கள்‌ நிகழ்கின்றன. உண்ணும்‌ உணவு முழுமையாக ஜீரணமாகி நல்‌ ஊட்டச்சத்துக்கள்‌ பிரிக்கப்பட்டு அவை மீண்டும்‌ ஒருங்கிணைந்து உடல்‌ செல்களாக பரிணமிப்பதற்க்கும்‌, கழிவுகளை வெளியேற்றுவதற்க்கும்‌ வெப்பம்‌ தேவைப்படுகிறது. எனவே சூர்ய கதிர்களில்‌ நேரடியாக நம்மைக்‌ காய வைப்பதும்‌. வெயிலில்‌ விளைந்த கனிகள்‌, காய்களை உண்பதும்‌ சூர்ய நெருப்பு உயிராற்றலை அதிகரிக்கும் வழிகளாகும்‌. மண்‌ – உயிராற்றலை கூட்டுதல்‌ பிற உயிர்களை தோற்றுவிக்கும்‌ சக்திக்ககாண்ட மண்ணிலிருந்து ப்ராணன்‌ பெறப்படுகிறது. அதாவது இங்கு மண்ணின்‌ ப்ராணன்‌ அல்லது உயிர்‌ என்பது காந்த சக்தியாகும்‌. இந்த காந்த சக்தியே ஒரு செல்லின்‌ செயல்பாட்டையும் ஆரோக்கியத்தையும்‌ நிர்ணயிக்கிறது. ஒரு செல்லின்‌ காந்த சக்தி குறைவே அந்த செல்‌ கேன்சர்‌ செல்லாகவோ அல்லது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்‌ நோய்வாய்ப்பட்ட செல்லாகவோ (AUTO IMMUNE DISORDER CELL) மாறுவதற்கு காரணம்‌, இயற்கை வழி விவசாயத்தில்‌ பெறப்பட்ட உணவுகள்‌ மற்றும்‌ மண்ணின்‌ நேரடி தொடர்பின்‌ மூலமும்‌ மண்பாணை சமையல்‌, மண்பாணை தண்ணீர்‌, கூலாங்கற்களில்‌ நடத்தல்‌, சேறுமிதித்தல்‌, மண்குளியல்‌ ஆகியவற்றின்மூலம்‌ மண்‌ தத்துவம்‌ அதாவது காந்த சக்தி உடலில்‌ மேம்பட்டு உயிறாற்றலை 6பறுக்கலாம்‌..  
  பஞ்சபூதங்களின்‌ மூலம்‌ பெறப்படும்‌ உயிரானது நமது உடலில்‌ நாடிகளின்‌ வழியே இயங்குவதாகவும்‌ நமது உடல்‌ 72,000 நாடிகளைக்‌ கொண்டுள்ளதாகவும்‌ நமது யோக சாஸ்திரங்கள்‌ (ஹத யோகம்‌, கிரண்டசம்ஹிதம்‌) கூறுகின்றன. மேலும்‌ இவ்வனைத்து நாடுகளும்‌ நாம்‌ எடுக்கும்‌ சுவாசத்தின்‌ மூலம்‌ இணைக்கப்படுகிறது. ஒரு நீமிடத்தில்‌ ஒருவர்‌ சராசரியாக 15 முறை சுவாசம்‌ எடுக்கிறார்‌. (15 * 60 நிமிடம்‌) *24 (மணி) – 21,600) அதாவது ஒரு நாளுக்கு தோராயமாக 21,600 முறை சுவாசிக்கிறார்‌. இதனை பல்லாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்னரே கணக்கிட்டு நம்‌ முன்னோர்கள் சிதம்பரம்‌ கோவிலின்‌ மேற்கூரையை 72, 000 ஆணிகள்‌ கொண்டும்‌ 21,600 தங்க கம்பிகளால்‌ அவற்றை இணைத்தும்‌ வடிவமைத்துள்ளனர்‌. நமது உடலில்‌ உள்ள 72.000 நாடிகளில்‌ 12 நாடிகள்‌ ராஜ நாடிகள்‌. இவை ஒவ்வொன்றும்‌ 2 மணி நேரம்‌ தன்னை பலப்படுத்தி புதுபித்துக்கொள்ளும்‌. எனவே தான்‌ மாலையில்‌ களைத்துவிடும்‌ உடல்‌ மறுநாள்‌ நல்ல உறக்கத்திற்கு பின்பு காலையில்‌ புத்துணர்வுடைகிறது. எந்த நேரத்தில்‌ எந்த நாடி பலம்‌பெறுகிறது. அதற்கு எந்த செயல்‌ செய்ய வேண்டும்‌ என்பதனை உணர்ந்து அதற்க்கேற்றார்போல்‌ நமது வாழ்வியலை அமைத்துள்ளனர்‌ நமது சித்தர்கள்‌. ‌‌ உயிரின்‌ பாதியாக செயல்படும்‌ இந்த நாடிகள்‌ மன எண்ணங்களை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது. எனவேதான்‌ மனம்மூலம்‌ செயல்படும்‌ உயிரை மனிதன்‌ என்று அழைத்தனர்‌. நம்‌ முன்னோர்கள்‌ மனம்‌ இல்லையெனில்‌ மனித உருவம்‌ பெற்று பிறந்திருப்பினும்‌ அவர்களை மக்கள்‌‌, விலங்குகள்‌ என்கிறார்‌‌‌ – திருவள்ளுவர்‌. மனம்‌ உயிரையும்‌ உடலையும்‌ இணைக்கும்‌ அற்புத மாய சக்தியே மனம்‌. உண்மையில்‌ மனமானது தான்‌ என்னும்‌ எண்ணத்திற்கேற்ப உயிரையும்‌ உடலையும் பயன்படுத்திக் கொள்கிறது. மனம்‌ என்பது எண்ணங்களின்‌ தொகுப்பே. ஒரு நாளில்‌ தோராயமாக 16,000 க்கும்‌ ஏற்பட்ட எண்ணங்கள்‌ தோன்றுவதாக ஒரு ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்‌ என்கிறார்‌ விவேகானந்தர்‌. பல எண்ணங்களுக்கும்‌ நமது உடல்‌ உறுப்புகளுக்கும்‌ மிகமிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மனம்‌ மகிழ்ச்சியாக இருக்கும்போது நமது உடலில்‌ என்டார்பின்‌ என்ற ஹார்மோன்‌ சுரந்து முழு ஆரோக்கியத்தைக்‌ காக்கிறது. அதே சமயம்‌ நமது மனம்‌ அழுத்தத்திற்கு உள்ளாகும்‌ போது பல ஹார்மோன்கள்‌ உருவாகி பல வாழ்நாள்‌ நோய்களை உருவாக்குகின்றன. உதாரணமாக ஒரு கர்ப்பிணி கர்ப்பத்தில்‌ இருக்கும்‌ தனது சிசுவின்‌ வளர்ச்சியை பற்றியோ அல்லது பிள்ளைப்பேரைப்பற்றியோ பயந்து கொண்டேயிருப்பின்‌, பயத்தின்‌ விளைவாக உடல்‌ தசைகள்‌ இறுகத்‌ துவங்குகின்றன. உடல்‌ துடிப்பாக செயல்பட இயலாத நிலைக்கு ஆளாகிறது. இரத்த நாளங்களின்‌ போக்குவரத்து தடைபடுகிறது. கர்ப்பபைக்கு செல்ல வேண்டிய இரத்த நாளமும்‌ சுருங்கி சிசுவுக்கு கிடைக்க வேண்டிய இரத்த ஓட்டம்‌ தடைபடுகிறது. தசைகளும்‌ இரத்தநாளங்களும்‌ இறுகுவதால்‌ இரத்த அழுத்தம்‌ அதிகரிக்கிறது. இதுவே சிசு வளர்ச்சியை பாதிக்கும்‌ மிக முக்கிய காரணியாக மருத்துவ உலகில்‌ கண்டறியப்பட்டுள்ளது. மேலும்‌ பயம்‌, குழப்பம்‌. மற்றும்‌ பதற்றத்தினால்‌ தாறுமாறான வகையில்‌ தசைகள் சுருங்கி விரிய துவங்குகின்றன. இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்‌ பல ஹார்மோன்கள்‌ சுரந்து கர்ப்பகால.சர்க்கரை என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இறுதியில்‌ அறுவைசிகிச்சை செய்துகுழந்தையை எடுக்க வேண்டிய கட்டாயம்‌ ஏற்ப்படுகிறது. மாறாக கர்ப்பிணி சந்தோஷமாக நம்பிக்கையுடன்‌ மனமகிழ்ச்சியின்‌ நிறைவோடு இருக்கும்‌ பட்சத்தில்‌ அவளின்‌ உடலும்‌ மனமும்‌ ஓய்வான தளர்வான நிலையில்‌ இருக்கும்‌. கர்ப்ப பைக்கு சீரான இரத்த ஓட்டம்‌ நிகழும்‌. குழந்தை நன்கு வளர கர்ப்ப பை விரிந்து கொடுக்கும்‌. குழந்தை பூரண வளர்ச்சி பெற்று இயல்பாக தாயின்‌ இடுப்பு எலும்புகளின்‌ வலியாக தலை கீழாக இறங்கி சுகமாக பிரசவித்த வெளிவருகிறது. எனது அனுபவத்தில் பலர் இறுதிமாதத்தில் தலை திரும்பவில்லை. பனிக்குடநீர் போதவில்லை எனவே அறுவைசிகிச்சைதான் தீர்வு என்ற நிலையில் வந்தனர். அவர்களுக்கு உடல் அமைப்பு, கர்ப்ப பையின் சிறப்பு இயல்பு சிசுவின் வளர்ச்சி மற்றும் சரியான சுவாச பயிற்ச்சி, உணவுமுறைகள், உறங்கும் முறைகள், ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனனியோகம், பூரணியோகம், மற்றும் அபிமன்யு யோக பயிற்சி கொடுத்ததில் மனதில் நம்பிக்கை ஏற்பட்டு எவ்வித அறுவைசிகிச்சையும் இன்றி சுகப்பிரசவம் நிகழ்ந்தது. பக்கவிளைவுகள் இன்றி தாயும் சேயும் நலமாக உள்ளனர்.  
    எனவேதான் மனதை நோயிற்க்கும் ஆரோக்கியத்திற்க்கும் ஆதாரமாக கூறுகிறோம். துன்பம் அல்லது மன அழுத்தத்தின் மூல காரணம் யோகக்கலையை தொகுத்த மாமுனிவர் பதஞ்சலி, தனது யோக சாஸ்திரத்தில் ‌ ‌‌துன்பத்திற்கு கீழ்க்கண்ட ஐந்து காரணங்களை விளக்குகிறார் 1. அறியாமை – போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது 2. விருப்பு- சிலர் மீது அல்லது சிலவற்றின் மீது அதிக நாட்டம் காட்டுவது. 3. வெறுப்பு – சிலர் மீது அல்லது சிலவற்றின் மீது அதிக வெறுப்பு. 4, கர்வம் – தன்னால் மட்டுமே இயனும் (அ) தனக்கு மட்டுமே உரியது. என நன்னை உயர்த்திக்கொள்வது அல்லது தாழ்த்திக் கொள்வது 5. மாயை – ஒன்றை பிறிதொன்றாக நினைத்து தவறாக புரிந்து கொள்வது. இந்த ஐந்து காரணங்களினால் ஒவ்வொரு மனிதனும் ஐந்து வித உணர்வுகளுக்கு ஆளாகுகின்றனர். 1. மன அழுத்தம் 2. போட்டி (ச) பொறாமை (அ) உயர் / தாழ்வு மனப்பான்மை 3. கர்வம் தான் என்ற அகந்தை 4. பயம் 5. கோபம் இவைகளே நோய்க்கு ஆதாரம் என்கின்றனர். இன்றைய நவீன மருத்துவர்கள். நோயின் படி நிலைகள் முதல்நிலை மன உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களான மனஅழுத்தம், பொறாமை, பயம், கோபம், கர்வம் போன்றவற்றாறும், இவற்றினால் வாழ்வியல் இயல்பு முறையில் ஏற்படும் குழப்பங்ளாலும் வாழ்வானது இயற்கையிலிருந்து செயற்கையான துரித வாழ்வியலுக்கு அழைத்துச்செல்கிறது. இங்குதான் நோய் ஆரம்பமாகிறது மன உணர்வுகள்  பஞ்சபூதங்களின் மாறுபாடுகள் கோபம்‌ ‌   பாதிக்கும் உறுப்புகள் (கழிவுதேக்கம்) ஆகாயம் கல்லீரல், பித்தப்பை பொறுமை, ஒப்பீடு (பரவுதல்) காற்று ‌‌ நுரையீரல்பெருங்குடல்,தோல் கர்வம் ‌ ‌ (வெப்பம்) நெருப்பு இதயம், சிறுகுடல் பயம். (வறட்சி) நீர் சிறுநீரகம் சிறுநீரகப்பை மன அழுத்தம் ‌‌. ‌ (கணம்) மண் மண்ணீரல், இரைப்பை இரண்டாம் நிலை மனநிலை மாற்றத்தினால் 72,000 நாடிகள் வழியாக செல்லும் உயிராற்றல் தாறுமாறு அடைந்து அல்லது தேக்கமடைந்து உடல் உருப்புகளுக்கு செல்லும் உயிறாற்றலில் மாற்றம் அடைகிறது. இதனால் உடலில் கழிவுகள் தேக்கமடைகின்றன. உறுப்புகளுக்குச் செல்லும் ஊட்டச்சத்து குறைகிறது. அதாவது கோபப்படும்பொழுது கல்லீரலுக்கு செல்லும் நாடி தடைபட்டு இரத்த ஓட்டம் குறைந்து கல்லீரலில் கழிவுகள் தேங்கி நோய் ஏற்படுகிறது. தான் என்ற அகந்தை அல்லது கர்வம் ஏற்படும்பொழுது இதயத்திற்கு செல்லும் நாடி அடைபட்டு இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் கிடைக்காமல் ஆங்காங்கே தேங்கி அடைப்புகள் ஏற்படுகிறது. கழிவுகளின் தேக்கம் ஒரு குறிப்பிட்ட திட்ட அளவை(THRESHOLD LEVEL) அடைந்தவுடன் உடலின் தன்னைத்தானே சீர்செய்துகொள்ளும் சக்தி துரித நோய்கள் (ACUTE DISEASES) – வாந்தி, பேதி, காய்ச்சல், சளி, இருமல், வலி மற்றும் ஒவ்வாமை போன்றவற்றின் மூலம் உடலை சீர்செய்ய முயலுகிறது. மூன்றாம் நிலை முதல் மற்றும் இரண்டாம் நிலையை சரியாக கையாளாமல் இருப்பின் உருப்புகளின் செயல்பாடு தவறி கழிவுகளின் தேக்கம் அதிகரித்து ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரித்து இரத்தத்தில் சீறற்ற நிலை ஏற்படுகிறது. இந்நிலையை சீர்செய்ய இதயம் துரிதமாக செயல்படுகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. துரித பணிக்காக இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகிறது. நுறையீரலின் செயல்படும் வேகம் கூடுகிறது. தசைகள் இறுக்கமடைகின்றன. இந்நிலையில் இரத்த பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலம் பரிசோதனைகளின் மூலம் நோயை உறுதி செய்யலாம். நான்காம் நிலை மூன்றாம் நிலையானது நீண்ட நாட்களாக தொடருமாயின் உறுப்புகளின் அமைப்பில் மாறுபாடு ஏற்படுகிறது. உதாரணமாக உறுப்புகள் வீக்கமடைதல் இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படுதல் நீண்டநாளைய கழிவு தேக்கம் கட்டிகளாக வலுபெறுதல் என நோயானது நான்காம் நிலையை பெறுகிறது. இம்மாறுபாடுகளை ஸ்கேன் (SCAN), எக்ஸ்ரே(XRAY), சிடி ஸ்கேன்(CT SCAN), எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (MRI SCAN), பெட் ஸ்கேன் (PET SCAN) போன்ற பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. நோயின் மூலக்காரணம் மனநிலை மாற்றமே மனநிலை மாற்றம் உயிரோட்டத்தில் தடுமாற்றம் (நாடிகளில் மாறுபாடு)   உடல் உறுப்புகளின் உயிறாற்றல் பற்றாக்குறைவு. கழிவு தேக்கம்   உறுப்புகளின் செயல்படுதிறன் குறைவடைதல் இரத்தம் மற்றும் நிணநீரில் வேதியல் மாறுபாடு உறுப்புகள் நலிவுறுதல் மரணம் உயிரோட்டத்தில் தடுமாற்றம் (நாடிகளில் மாறுபாடு உடல் உறுப்புகளின் உயிறாற்றல் பற்றாக்குறைவு. கழிவு தேக்கம் உறுப்புகளின் செயல்படுநிறன் குறைவடைதல் இரத்தம் மற்றும் நிணநீரில் வேதியல் மாறுபாடு (நம் பாரத நாட்டின் புராதான சாஸ்திரங்கள் ஆறு வித வழிமுறைகளைக் கொண்டு உலகியலை பகுத்தாராய்கின்றனர். அவை நியாய 2. வைசேசிகம். 3. சாங்கீயம் 4. யோகம் 5. புராண வேதம் 6. தற்கால வேதம் என்பவை யோகத்தின் இணை கோட்பாடான சாங்க்ய தத்துவம் மனிதனின் நோய் காரணிகளை ஆராய்கிறது. அதில் யோகக் கலையில் குறிப்பிட்டுள்ள மன உணர்வுகளை (உணர்ச்சிகளே) நோய்க்கான முதற்காரணியாகக் குறிப்பிடுகிறது. இவற்றிற்கு ஆகிஜ வியாதிகள் (மனதினால் ஏற்படுபவை 98%) பிற ஏதேச்சையாக நடப்பவை. உம் விஷகடிகள் விபத்துகள், இயற்கை சீற்றங்கள் கர்ம பயனால் வரக்கூடிய பாரம்பரிய நோய்கள் என வகைப்படுத்துகின்றனர். மனமிருந்தால் மார்க்கமுண்டு தோயானது மனதிலிருந்தே துவங்குவதால் சிகிச்சையும் மனநிலைமாற்றத்திலிருந்தே துவங்க வேண்டும். * முதலில் நமது உடலிற்க்கும் மனதிற்க்கும் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் சக்தி உண்டு என்பதை திரும்ப திரும்ப சொல்லி உடலில் ஒவ்வொரு செல்லிலும் அதை பதிய வைக்க வேண்டும். *எண்ணங்களின்/மனதின் வலிமை பிரபஞ்சமும் உடலும் பஞ்சபூதத்தினால் ஆனவை என்பதால் மனதில் நினைக்கும் அனைத்து விதமான எண்ணங்களும் பிரபஞ்சத்தில் பிரதிபலிக்கின்றன. மனதில் கரு உருவானதே அன்பின் ஆனந்தத்தின், நம்பிக்கையின் வெளிப்பாடு. மனதில் அன்பு மேலோங்கும் பொழுது நம்பிக்கை ஏற்படும்பொழுது பிரபஞ்சத்தில் நேர்மறையான அதிர்வுகள் ஏற்படுகிறது. இவை நம்முள் அமைதியையும் சமூகத்தில் நல் உறவுகளையும். நம்மைச்சுற்றிலும் நல் அதிர்வுகளையும் ஏற்படுத்துகிறது. எனவே எப்பொழுதும் நம்பிக்கையுடன் நமக்கு பிடித்தமானவற்றையும் தேவையானவற்றையும் சிந்திப்போம், உதாரணமாக ‘ தாமதிக்காமல் செல்ல வேண்டும்’ என்பதிற்கு பதிலாக ‘சரியான நேரத்திற்க்கும் சென்று விட வேண்டும்’ என திட்டமிடலாம் ‘ தாறுமாறாக பொருளை வைக்க வேண்டாம்’ என்பறிற்கு பதிலாக ‘பொருட்களைஅதன்அதன்இடத்தில் வைத்தால் நேர்த்தியாக இருக்கும்” என்பது போன்ற நேர்மறைவாக்கியங்களை பயன்படுத்துவோம். * யோகா பயிற்சி
  யோகா கலை என்பது உடலிற்க்கும், பிராணணிற்க்கும், மனதிற்க்கும். ஞானத்திற்க்கும், ஆன்மாவிற்க்குமான பயிற்சி, யோக பயிற்சி நம் மகிழ்ச்சிக்கான ஆதாரம். இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம் பஞ்ச பூதங்களினால் உருவம் பெற்று உயிர்பெற்ற நம் உடலை நம் பஞ்சபூதங்களைக்கொண்டே சீர் செய்யும் அற்புத வாழ்வியல் மருத்துவம். நமது நலம் நம் கையில் என்ற அடிப்படையில் நம்மை நாமே ஆரோக்கியபடுத்திக்கொள்ள முடியும். இயற்கை மருத்துவத்தில் ஒவ்வொரு சிகிச்சையின்போதும் உடலும் மனதும் பஞ்சபூதங்களின் தன்மையும் பெறுகின்றன.
  யோகப்பயிற்சி எவ்வாறு நன்மை பயக்கிறது? * பதஞ்சலி யோகப்பயிற்சியின் முதல் இரு படிகளாக உள்ள யாளங்கள் (அகிம்சை, உண்மைபேசுதல், பிறபொருட்களுக்கு ஆசைபடாதிருத்தல், சுயநலம் இல்லாது இருத்தல், திருடாமை). நியமங்கள் (சந்தோசமுடன் இருப்பது, உள்ளும் புறமும் சுத்தமாக இருப்பது, சுய ஒழுக்கம், புலனடொக்கம், நலம் மற்றும் ஈஸ்வர அர்ப்பணம்) போன்றவை ஒருவரின் வாழ்வியலை நெறிப்படுத்த உதவுகிறது. *மனதிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது . * பதட்ட காலத்தில் மன எண்ணங்கள் சிதறி தாறுமாறாக வேகமாக செயல்படும். யோகா பயிற்சியை தொடர்ந்து செய்யும்பொழுது மனதில் அதீத வேகம் கட்டுப்படுத்தப்பட்டு நிதானமாக ஆழ்ந்து சிந்திக்கும் திறன் மேம்படுத்தப்படுகிறது. • மனதின் ஒருங்கிணைக்கும் திறன் மேம்பட்டு எளிய வகையில் பிரச்சணைகளுக்கு தீர்வுகண்டறிய உதவுகிறது. • உற்சாகத்தையும், தளர்வறியா தன்மையும், தொடர்செயல் திறனையும் ஏற்படுத்துகிறது. * பிறரை நேசிக்கும் போது தனது உடலும் உள்ளமும் நேசிக்கப்படுகிறது. யோகக்கலை அன்பை வளர்க்கிறது. * மனதில் நேர்மையையும், தைரியத்தையும், கருணையையும், சேவை செய்யும் ஆர்வத்தையும் அதிகரிக்கிறது. * யோக பயிற்சியில் இரத்த ஓட்டம் சீராக உறுப்புகளை சென்றடைகிறது. * பிராண சக்தி மேம்படுகிறது. * உடலும், மனதும், உயிரும் ஒருங்கிணைகிறது. * அனைத்து புலன் உறுப்புகளும் முழு விழிப்புணர்வு நிலையில் ஞானத்தை பெருகின்றன. * உறுப்புகளில் திசுக்கள் மற்றும் செல்களின் செயல்படுதிறன் அதிகரித்து உடல் சுறுசுறுப்படைகிறது. * கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்படுகிறது * ஊட்டச்சத்துகளை உட்கிரகிக்கும் திறன் அதிகரிக்கிறது * ஒவ்வொரு உறுப்புகளும் முழு கழிவு நீக்கம் மற்றும் பூரண உணர்வு, ஊட்டம் பெறுவதால் முகம் பொழிவு பெறுகிறது. * செல், திசுக்களின் முதிர்ச்சி தடுக்கப்பட்டு இளமை பாதுகாக்கப்படுகிறது. * நோய்வாய்ப்பட்ட செல்கள் புத்துணர்வு பெற்று முழு நலன் பெறுகிறது. * இரத்தத்தின் அமில கார தன்மை சமநிலைப்படுத்த படுகிறது. எனவே நுண் இரத்த குழாய்களின் இரத்த ஓட்டம மேம்படுகிறது. எனவே சிறுநீரக நோயாளிகள் தோல் நோய், சுவாச நோய், மற்றும் கண் நோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. * மனம் மற்றும் தசைகள் ஓய்வு நிலையில் தளர்வாக இருக்கும்பொழுது இரத்த அழுத்தம் சீரடைகிறது. * உள்ளுறுப்புகான கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம், கர்ப்ப பை, விதைப்பை, சிறுகுடல் மற்றும் பெறுகுடல் போன்றவற்றிற்கு பயிற்சி கிடைப்பதால் பலம் பெறுகின்றன. * ஜீரணம் மேம்படுகிறது உலகமே மிரண்டு நிற்க்கும் சர்க்கரை வியாதியிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப செய்கிறது. * பல யோகப்பயிற்ச்சிகளின் உடலானது நன்கு இறுக்கப்பட்டு பின்பு முழுமையான ஓய்வு நிலைக்கு ஆட்படுத்த படுகிறது. இது அவசர காலத்தின் போது தசைகளை துரிதப்படுத்தி செயல்திறனை தேவைக்கேற்ப அதிகரித்து உடலை சிக்கலான சூழ்நிலையிலும் பாதுகாத்திட உதவி செய்கிறது. உச்சகட்ட பதட்டம், கோபம், பயம், மற்றும் மனஅழுத்தம் ஏற்படினும் அதனை எதிர்க்கொள்ளும் சக்தியைக் கொடுக்கிறது * எந்த ஒரு செயலையும் நுணுக்கமாக செய்யும் செயல்திறனை கூட்டுகிறது. இயற்கை மருத்துவ சிகிச்சைகள் எவ்வாறு தன்மை பாக்கிறது? * பிரபஞ்ச சக்தியை நம் உடலில் கூட்டி உயிரை வளர்க்கிறது. * எவ்வித பக்கவிளைவுகளுமின்றி எளிய முறையில் உடலை பலப்படுத்துகிறது. * மன எண்ண மாறுபாட்டால் நாடிகள் நாடிகள் மற்றும் இரத்த குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை எவ்வித வேதியியல் மருந்துகளுமின்றி இயற்கையாக உடல் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள உதவி செய்கின்றன * உடல் பலம்பெறும்பொழுது மனம் பலம்பெறுகிறது. ‘தேக பலம் நான் மனோபலம் மனோபலம் தான் தேக பலம்’ * இயற்கை மருத்துவத்தில் மண் சிகிச்சையின்போது உடலும் மனமும் மண்ணின் தன்மைகளை பெறுகிறது. அதாவது அலைபாயும் மனதை நிலைபெறச் செய்ய உதவுகிறது. உடலின் காந்த சக்தியை அதிகரிக்க உதவுகிறது. * நீர் மற்றும் காற்று சிகிச்சையின்போது விடாப்பிடியான பிடிவாதங்கள் மன அழுத்தங்கள் இலகுவாகின்றன: * நெருப்பு சிகிச்சையின் போது எவ்வாறு சூரியன் பூமிக்கு சக்தியை கொடுக்கின்றதோ, அதேபோல் நமது உடலும் மனமும் முழு சக்தியை பெறுகின்றன. * இலையுதிர் காலத்தின்போது எவ்வாறு மரம் தனது இலைகளை உதிர்த்து மீண்டும் துளிர்விட்டு பொலிவு பெறுகிறதோ அதேபோல் ஒவ்வொரு நோயின் போதும் நமது உடலில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு ஒவ்வொரு செல்லும் இயற்கை மருத்துவத்தின் மூலம் பொலிவுபெறுகிறது. மனமானது இளமையை பெறுகிறது * ஏதேனும் ஒரு சிறு உறுப்பு நோய்வாயப்படும் பொழுது முழு உடலும் ஒருங்கிணைந்து வலியை எதிர்கொள்கிறது. உதாரணமாக பல்வலியின் போது பல் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை. பல்லிற்க்கு வரும் இரத்த குழாய், நரம்பு, ஜீரண மண்டலம், கழிவு நீக்க மண்டலம் என அனைத்து உறுப்புகளும் வேதனையை அனுபவிக்கப்படுகின்றன. முழு உடலும் பல் வலியை குணமாக்க முயற்சிக்கின்றது. சீர் செய்யும் இந்த சக்தியே உயிர் சக்தி இந்த உயிர்சக்தியே இயற்கை மருத்துவத்தின் அடிப்படை இயற்கை மருத்துவத்தில் நோய் என்பது உயிர்சக்தியின் குறைபாடே. * நோய் பல அல்ல, ஒன்றே. கழிவு தேக்கமே நோய். கழிவு நீக்கமே சிகிச்சை. இயற்கை மற்றும் யோக மருந்துவத்தில் மட்டுமே மனதிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உலகில் வெற்றியாளர்களாக திகழும் பலரும் இயற்கை வாழ்வியலை அடிப்படையாக கொண்டுள்ளனர். பொருளாதாரத்தில் மேலோங்கிய மேற்கத்தியநாட்டவர் அனைத்துவித அடிப்படை கட்டமைப்புகள் பெற்றிருப்பினும் அவர்களின் பலரும் மன மகிழ்ச்சியின்றி, தூக்கமின்றி, தயரத்தில், மன அழுத்தத்தில் உழல்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அதிகமாக புற வாழ்வியலுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், அக வாழ்வியல் பற்றிய புரிதல் இன்மையுமே. பொருட்கள் சேர்க்கை அதிகரிக்க அதிகரிக்க தன்னுள் அகந்தை ஏற்பட்டு மனது மாசு அடைகிறது.யோகப்பயிற்சி மனதையும், உடலையும் சுத்தப்படுத்துவதால் இன்று உலகமே யோகப்பயிற்சியை போற்றி வணங்குகிறது.  
    துர்திக்ஷ்ட வசமாக இன்று பலரும் மனதோடு இணையாமல் யோகப்பயிற்ச்சியை வெறும் மூச்சுப் பயிற்சியாக, வெறும் முத்திரை பயிற்சியாக உடலை வளைக்கும் வித்தைப் பயிற்ச்சியாக செய்து வருகின்றனர். பல அமைப்புகள் யோக போட்டிகளை நடத்தி முதலாம் பரிசு, இரண்டாம் பரிசு என கொடுத்து அகங்காரத்தை வளர்த்து விடுகின்றனர். மாறாக கூட்டுபயிற்சி போட்டிகள் நடத்தும்பொழுது அகங்காரம் மேலோங்குவதற்கு பதிலாக ஒருங்கிணையும் தன்மை ஒவ்வொருவரிடமும் வளரும்). இயற்கை மற்றும் யோக மருத்துவத்தில் மனநோய்களுக்கு ஓருங்கிணைந்த சிகிச்சை ஒவ்வொரு மன உணர்வுகளுக்கும் ஏற்ப உறுப்புகளும் பஞ்சபூத உயிறாற்றலும் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே எந்த உணர்வு மேலோங்கியுள்ளது. எந்த நாடி அடைபட்டுள்ளது. எந்த உறுப்பு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்பதை நாடி பரிசோதனை மற்றும் முழுஉடல் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ற யோகசிகிச்சை, இயற்கை மருத்துவ சிகிச்சை, உணவு மாற்றம் மற்றும் வாழ்வியல் மாற்றம் ஆகியவற்றை முறையாக செய்ய வேண்டும். குறிப்பு இடது நாசியில் சுவாசம் எடுப்பதற்க்குப் பதிலாக வலது நாசியில் சுவாசம் எடுக்கும்போது உடல் குளர்ச்சியடைவதற்க்கு பதிலாக சூடாகி பெரிய உபாதையாகி மாற்றி விடலாம். தவறாக தகுந்த தயாரிப்பு இல்லாமல், புத்தகம், தொலைக்காட்சி பார்த்து தமக்குத்தாமே பயிற்சி செய்வதால் சிகிச்சையே செய்ய இயலாத பக்கவிளைவுகள் கூட ஏற்படுத்தி விடலாம். எனவே ஐந்தரை வருட அரசு மருத்துவ பட்டம் (BNYS) பெற்ற மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி செய்தல் நன்மை பயக்கும், மன அழுத்தம் எனும் மன நோயிலிருந்து விடுபட : நம்பிக்கையுடன் பொறுமையாக இருப்பது இதற்க்கான தீர்வாகும். யோகப் பயிற்ச்சியில் முதுகுத்தண்டை திருகும் பயிற்சிகளான பவனமுத்தாசனம், த்ரயக் புஜங்காசம், வக்ராசனம, மச்சேந்திராசனம், த்ரயக் தடாசனம், பரிவிருத்த திரிகோணாசனம், பரிவிருத்த பார்ஷ்வ கோணாசனம், பூநமநாசனம், போன்றவை உதவி செய்யும், மூலாதார, ஸ்வாதிஸ்தானம், சக்கர தியானம், மன அழுத்தத்தை போக்கும், ஆதிமுத்திரை, ப்குத்வி முத்திரை பலன் தரும்.
    உணவு பழக்கத்தில் அதிக அளவு இயற்கையான இனிப்பு சுவையுள்ள காய்கள், பழங்கள், உலர்பழங்கள் மற்றும் தேன் கருப்பட்டி, கரும்புச்சர்க்கரை போன்றவை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். இயற்கை மருத்துவத்தில் மண் குளியல், நீர்சிகிச்சை, மசாஜ் மற்றும் நருமண சிகிச்சைகள் (ஆரோமா சிகிச்சைகள்- மன அழத்தத்தை போக்கவல்ல குறிப்பிட்ட சில பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையில் செய்யப்படும் சிகிச்சைகள்)  
    உயர்வு மற்றும் தாழ்வு (பொறாமை) மனநோயிலிருந்து விடுபட ஒவ்வொரு மனிதருள்ளும் தன்னிடம் இருக்கும் அதே தெய்வீகத்தன்மை இருப்பதை உணர்ந்து அனைவருடனும் ஒருங்கினைந்து செயல்படுவதன்மூலம் பொறாமையிலிருந்து விடுபடலாம். யோகப் பயிற்ச்சியில் நுரையீரலை விரிக்கும் சுவாசப் பயிற்ச்சிகளும் முதுகுத்தண்டை பின்னோக்கி வளைக்கும் ஆசனங்களும் உதவி செய்யும். சேதுபந்தாசனம், புஜங்காசன், சர்ப்பாசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம், மேருதண்டாசனம், வீரபத்ராசனம், சக்ராசனம், போன்ற ஆசனங்கள் உதவி செய்யும்.
    அனாஹத மற்றும் மணிபூரக சக்ர தியானமும், ஹிருதய முத்திரை, கருண முத்திரை, பத்ம முத்திரை, போன்ற முத்திரைகளும் மனதை பலப்படுத்தும். உணவு பழக்கத்தில் இதமான கார சுவைகொண்ட துளசி, கற்பூரவல்லி, குருமிளகு, முள்ளங்கி, நூல்கோல், குடைமிளகாய், காளிபிளவர், முட்டைக்கோஸ், இஞ்சி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய் மற்றும் புதினா போன்ற உணவுகள் மன ஒப்பீட்டை குறைக்கும் தன்மை கொண்டவை. இயற்கை மருத்துவத்தில் வெந்நீர் சிகிச்சைகள், வெற்றிலை பற்றிடுதல், நொச்சி போன்ற கார சுவையுள்ள மூலிகை மருத்துவ எண்ணை குளியல்கள் போன்றவை நலம் பயக்கும் பயம் என்னும் மன நோயிலிருந்து விடுபட  சரியான ஞானத்தை பெறுவதே பயத்திலிருந்து விடுபடும் உபாயமாகும். ஒவ்வொரு புலன் உருப்புகளுடனும் மனம் இணைந்து செயல்படுவதன் மூலம் ஞானத்தை பெறலாம். முன்னோக்கி மற்றும் பின்னோக்கி வளையும் யோகாசனங்கள் பயத்தை போக்க வல்லவை. ஹலாசனம், சர்வாங்காசனம், உத்தானபாதாசனம், நைளகாசனம், ஜானுசிரசாசனம், பச்சிமோத்தாசனம், பாதகஸ்தாசனம், திரிகோணாசனம், பாஸ்வகோணாசனம் போன்ற முன்னோக்கி வளையும் ஆசனங்களும் சேதுபந்தாசனம், புஜங்காசனம், சர்ப்பாசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம், மேருதண்டாசனம், வீரபத்ராசனம், சக்ராசனம் போன்ற பின்னோக்கி வளையும் ஆசனங்களும் உதவி செய்யும்.  
    ஸ்வாதிஸ்தானம், மூலாதாரம் மற்றும் மணிப்பூரக சக்ர தியானம், நாத அனுசந்தான தியானம்,ஜபம் மற்றும் ஜல, சங்க, யோனி, சக்தி, ஸ்வாதிஸ்தான, ஈஸ்வர முந்திரைகளும் பயத்தை போக்கவல்லவை.  
    உணவு பழக்கத்தில் அதிக விதையுள்ள காய்கள் – கொடிக்காய்கள் (பீர்க்கங்காய், புடலங்காய், வெண்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், அவரைக்காய், வெள்ளரிக்காய் போன்றவை. அதிக விதையுள்ள பழங்கள் (முலாம்பழம், தர்பூசணி பழம், நாட்டு மாதுளை, அத்திப்பழம், சீத்தாப்பழம், பப்பாளி, மனத்தக்காளி – கருஞ்சுக்கட்டி கீரைப்பழம்.) கருப்புநிற காய்கள் மற்றும் பழங்கள் அரிந்தால் கருப்பாகும் காய்கள் போன்றவை மனதை பலப்படுத்த வல்லவை. இயற்கை மருத்துவத்தில் நீர் சிகிச்சைகள், மண் சிகிச்சைகள் மற்றும் சிறுநீரக நாடி, மசாஜ் போன்றவை பலப்படுத்தும். கோபம் என்னும் மன நோய் பிற உயிர்களிடத்தில் அன்பு மற்றும் கருணை செலுத்துவதன் மூலம் கோபம் என்னும் மனநோயிலிருந்து விடுபடலாம். யேஸக பயிற்ச்சியில் உடலையும், மனதையும். சுத்தப்படுத்தும் யோக பயிற்ச்சியான கிரியைகள் கோபத்தை அடியோடு விரட்டி மனசாந்தத்தை ஏற்படுத்த வல்லவை.
    எண்ணங்களை தூய்மைப்படுத்தும் த்ராடகா, சுவாசத்தை தூய்மைப்படுத்தும் நேத்தி(ஜலநேத்தி, சூத்ர நேத்தி) ஜீரண மண்டலத்தை தூய்மைப்படுத்தும் தௌதி, பஸ்தி கிரியைகள் (வாமன தௌதி, வஸ்திர தௌதி, தண்ட தெளதி மற்றும் சங்க ப்ரக்சாலன க்ரியா) கபாலத்தையும், புத்தியையும், தூய்மைப்படுத்தும் கபாலபதி போன்றவை மிக சக்தி வாய்ந்த பயிற்ச்சிகள். ஆக்ஞை மற்றும் சகஸ்ரார சக்ர தியானம். ஓம் கார தியானம் மற்றும் வியான. வாயு மற்றும் கருட முத்திரைகள் கோபத்தை குறைக்கவல்லவை. உணவு பழக்கத்தில் லேசான புளிப்பு சுவை கொண்ட நெல்லி, திராட்சை, தக்காளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, அன்னாசி, ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம், போன்றவையும் முருங்கைகீரை, புளிச்சகீரை போன்றவையும் கோபத்தை மட்டுப்படுத்தவல்லவை. இயற்கை மருத்துவத்தில் உபவாசம் – விரதம், கழிவு நீக்க சிகிச்சைகளான எனிமா, வியர்வையை தூண்டும் வாழைஇலை குளியல் வெந்நீர் சிகிச்சைகள், சிறுநீரைப்பெறுக்கும் நீர் சிகிச்சைகள் அபான வாயுவை வெளியேற்றும் மசாஜ் சிகிச்சைகள், மற்றும் கல்லீரல், பித்தப்பை நாடி மசாஜ் போன்றவை மனதை பலப்படுத்தும். கர்வம் என்னும் மனநோயிலிருந்து விடுபட கர்வம் அல்லது அகந்தை விடுபட அனைவரிடனும் ஒத்திசைந்து, எளிமையாக வாழ பழகிக்கொள்ள வேண்டும். யேஸக பயிற்சியில் சூர்ய நமஸ்காரம். உடலில் வெப்பத்தை ஏற்படுத்தும் ப்ராணயாம பயிற்சிகள்.துரிதயோக பயிற்சிகள் (DYNAMIC YOGA) போன்றவை கர்வத்திலிருந்து நம்மை வெளிக்கொணர உதவிசெய்யும்
    அனாகத மற்றும் மணிபூரக சக்ர தியானம் மற்றும் குபேர. மேருதண்ட, பிரம்ம, மூஸ்திக , வஜ்ர முத்திரைகளும்ம் உதவிசெய்யும். உணவு பழக்கத்தில் கசப்பு சுவை கொண்ட வெந்தயம், பாவற்க்காய், சுண்டக்காய், தேன், சுக்கட்டி கீரை, பாலக்கீரை போன்றவை கர்வத்தை குறைக்கவல்லவை.  
    இயற்கை மருத்துவத்தில் வாழைஇலை குளியல், மண் குளியல், சூர்ய குளியல், வெண்ணீர் சிகிச்சைகள், சிறுகுடல், இதய நாடி மசாஜ் மற்றும் வண்ண குனியல் போன்றவை மனதை இளகுவாக்கும். இன்றைய உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பவை மனஅழுத்தமும், சுற்றுச்சூழல் மாசுபடுதலுமே, இவ்விரண்டிற்கும் நமது பாரத நாட்டின் பழம்பெரும் வேத வைத்தியங்களான யோகமும் இயற்கை மருத்துவமும் சிறந்த தீர்வாக அமையும். இயற்கை வாழ்வியலை ஏற்போம். இயற்கை அன்னையை காப்போம் யோக பயிற்சி செய்வோம். அரிதற்கினிய மனிதப்பிறப்பை மன மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.